25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >> ராஜபாளையம் நகராட்சிதொடர் மழையால் குடிநீர் தேக்கம் நிறைவு. விவசாய பணிகள்  வேகம். >> நம்மை விட்டுப் பிரிந்த, வாழ்ந்த தெய்வம் டாக்டர். G.ராஜசேகர் (எ) கண்ணாவிற்கு இதய அஞ்சலி ! >> ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில்  ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்ஸவம் . >>


சதம் அடித்த ஜெமிமா ,ஆட்ட நாயகி விருதை வென்றார். இந்தியா வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சதம் அடித்த ஜெமிமா ,ஆட்ட நாயகி விருதை வென்றார். இந்தியா வெற்றி.

இந்தியா வந்துள்ள அயர்லாந்து பெண்கள் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று, ராஜ்கோட்டில் 2வது போட்டி நடந்தது.இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதம் கடந்து கைகொடுக்க, இந்திய பெண்கள் அணி 116 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 370 ரன் குவித்தது.இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3, பிரியா மிஷ்ரா 2 விக்கெட் சாய்த்தனர்.

 கடந்த 2018ல் இந்திய அணியில் அறிமுகமான ஜெமிமா ரோட்ரிக்ஸ், 7 ஆண்டுகளுக்கு பின் தனது முதல் சர்வதேச சதத்தை நேற்று பதிவு செய்தார். ஜெமிமா கூறுகையில், "சர்வதேச அரங்கில் முதல் சதம் அடித்ததில் மகிழ்ச்சி. இத்தருணத்திற்காக 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. இன்னும் நிறைய சதம் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு கைகொடுக்க விரும்புகிறேன்," என்றார். ஆட்ட நாயகி விருதை ஜெமிமா வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News